Tuesday, March 17, 2009

சிறுபான்மையின‌ர் என்ன கிள்ளுக்கீரையா ??

"இந்துக்கள் எல்லாம் ஒருபுறமிருக்கட்டும்.மற்ற அனைவரும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்"என்று தேர்தல் களத்தில் திருவாய் மலர்ந்திருக்கிறார் வருண்காந்தி.

இதற்கு பா.ஜ.க வே அதிருப்தி வெளியிட்டிருக்கிறது.

அவ‌ர‌து பேச்சுக்க‌ள் அட‌ங்கிய‌ வீடியோ சிடி ந‌ம்மூர் திருட்டு விசிடி ரேஞ்சுக்கு வ‌சூலில் சாத‌னை ப‌டைத்து கொண்டிருக்கும் இவ்வேளையில்,இந்த‌ செய்தி மிகைப்ப‌டுத்தப் ப‌ட்டிருக்கிறது என்றும் நான் அதில் முஸ்லிம்களைப் பற்றி குறிப்பிடவே இல்லையே எனவும் பல‌ காமெடி ஜ‌கா வாங்கியிருக்கிறார் வ‌ருண்.

தேர்த‌ல் விதிமுறைக‌ளை மீறிய‌த‌ற்காக‌, அவ‌ர் மீது கிரிமின‌ல் வழ‌க்கு தொட‌ர‌, தேர்த‌ல் ஆணைய‌ம்,உத்திர‌ பிர‌தேச தேர்த‌ல் ஆணைய‌த்திட‌ம் ப‌ரிந்துரைத்திருக்கிற‌து.

அர‌சிய‌ல் சுய‌லாப‌த்திற்காக‌வும், ஓட்டு வ‌ங்கிக்காக‌வும், ம‌க்க‌ளிடையே ம‌த‌ உண‌ர்வுக‌ளை தூண்டிவிட்டு, காய் ந‌க‌ர்த்துவோர் எண்ணிக்கை கொஞ்ச‌ம் க‌ணிச‌மாக அதிக‌ரித்து கொண்டே வ‌ருவ‌து க‌ண்கூடு.

இன்னும் என்னென்ன‌ கூத்துக்க‌ள் ந‌ட‌க்க‌விருக்கின்ற‌ன‌வோ !!!! பொறுத்திருந்து பார்ப்போம்.

வ‌ருணிட‌ம் ஒரே ஒரு கேள்வி: ச‌ரிங்க‌ண்ணா...இந்துக்க‌ளை த‌விர‌ ம‌ற்ற‌ ச‌ம‌ய‌த்தனைவ‌ரையும் இந்தியாவை விட்டு வெளியேற்றி விட‌லாம்.

அப்ப‌டியானால், அக‌ர‌ ( ஆங்கில )வ‌ரிசைப்ப‌டி, முத‌லில் அப்துல் கலாமையும், பிற‌கு அல்லா ர‌க்கா ர‌ஹ்மானையும் வெளியேற்றுவீர்க‌ளா ??

சொல்லுங்க‌ எச‌மான்..சொல்லுங்க‌...

93 comments:

நட்புடன் ஜமால் said...

என்ன டியர் என்னாச்சு ...

நட்புடன் ஜமால் said...

ஏன் டென்ஸன்

இதெல்லாம் தேர்தல் டையலாக்ஸ்

வால்பையன் said...

வருண்காந்தி யாரு?
எந்த கட்சி?

Anonymous said...

அப்பனை போல் பிள்ளையும் அவசரக்காரனாக இருக்கிறான். என்ன செய்ய்ய?
அவரவர் தலைஎழுத்துப்படி ஆகட்டும்.நாம் என்ன செய்ய முடியும்?

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
ஏன் டென்ஸன்

இதெல்லாம் தேர்தல் டையலாக்ஸ்
//


வாங்க‌ ஜ‌மால்...

அர‌சிய‌ல்ல‌ இதெல்லாம் சாதார‌ண‌ம‌ப்பா..

அ.மு.செய்யது said...

//வால்பையன் said...
வருண்காந்தி யாரு?
எந்த கட்சி?
//


மேனகா காந்தியின் தவப்புதல்வர் வருண்.

தற்போது பா.ஜ.க வுடன் இருக்கிறார்.

அப்துல்மாலிக் said...

செய்யது இதெல்லாம் சகஜமப்பா தேர்தல் வருதுல்லே, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது, இது கண்டாவது இனி வரும் காலங்களில் அனைத்து கட்சிகளும் கொஞ்சம் அடக்கிவாசிக்கட்டும்...

அப்துல்மாலிக் said...

//அவ‌ர‌து பேச்சுக்க‌ள் அட‌ங்கிய‌ வீடியோ சிடி ந‌ம்மூர் திருட்டு விசிடி ரேஞ்சுக்கு வ‌சூலில் சாத‌னை ப‌டைத்து கொண்டிருக்கும்//

ஹா ஹா எதுக்குதான் கிராக்கி இருக்காது நம்ம மக்க கிட்டே

அப்துல்மாலிக் said...

//அர‌சிய‌ல் சுய‌லாப‌த்திற்காக‌வும், ஓட்டு வ‌ங்கிக்காக‌வும், ம‌க்க‌ளிடையே ம‌த‌ உண‌ர்வுக‌ளை தூண்டிவிட்டு, காய் ந‌க‌ர்த்துவோர் எண்ணிக்கை கொஞ்ச‌ம் க‌ணிச‌மாக அதிக‌ரித்து கொண்டே வ‌ருவ‌து க‌ண்கூடு.
/

முன்னர் மாதிரியில்லை மக்களெல்லாம், எல்லோரும் விழித்திருக்கிறார்கள்,

அப்பாவி முரு said...

முட்டாள்தனமான வார்த்தைகள், மதத்தால் வேறுபட்டிருந்தாலும், நீங்களும், நானும் ஒரு தாய் வயிற்றில் வந்தவர்கள் தானே.

எம்.எம்.அப்துல்லா said...

நாட்டில் எத்தனையோ காமெடி...அதில் இதுவும் ஒன்று...அவர் பேச்சைக் கேட்பவர்கள் வாயால் சிரிக்க மாட்டார்கள்.


//முட்டாள்தனமான வார்த்தைகள், மதத்தால் வேறுபட்டிருந்தாலும், நீங்களும், நானும் ஒரு தாய் வயிற்றில் வந்தவர்கள் தானே.

//

முரு அண்ணே மிக்க நன்றி உங்களின் ஆதரவான தோழமைக்கும், சகோதரத்துவத்திற்கும்.

அ.மு.செய்யது said...

//அபுஅஃப்ஸர் said...
//அர‌சிய‌ல் சுய‌லாப‌த்திற்காக‌வும், ஓட்டு வ‌ங்கிக்காக‌வும், ம‌க்க‌ளிடையே ம‌த‌ உண‌ர்வுக‌ளை தூண்டிவிட்டு, காய் ந‌க‌ர்த்துவோர் எண்ணிக்கை கொஞ்ச‌ம் க‌ணிச‌மாக அதிக‌ரித்து கொண்டே வ‌ருவ‌து க‌ண்கூடு.
/

முன்னர் மாதிரியில்லை மக்களெல்லாம், எல்லோரும் விழித்திருக்கிறார்கள்,
//

நிச்சயமாக..

Vidhya Chandrasekaran said...

இந்த தேர்தல் காமெடியன்கள பார்த்து சிரிச்சுட்டு போய்கிட்டே இருக்கனும் பாஸ். வீணா டென்சனாவாதீங்க:)

தமிழ் அமுதன் said...

அவங்க பெரியம்மா!! சோனியாவ புடிக்கலைனா?
நேரடியா சொல்ல வேண்டியதுதானே?

ஏன் ? இப்படி ? சின்ன புள்ள தனமா ?

அ.மு.செய்யது said...

//அபுஅஃப்ஸர் said...
செய்யது இதெல்லாம் சகஜமப்பா தேர்தல் வருதுல்லே, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது, இது கண்டாவது இனி வரும் காலங்களில் அனைத்து கட்சிகளும் கொஞ்சம் அடக்கிவாசிக்கட்டும்...
//

அவரை கைது செய்து விட்டார்களா ??

அ.மு.செய்யது said...

//muru said...
முட்டாள்தனமான வார்த்தைகள், மதத்தால் வேறுபட்டிருந்தாலும், நீங்களும், நானும் ஒரு தாய் வயிற்றில் வந்தவர்கள் தானே.
//

நீங்கள்லாம் இருக்கும் போது என்ன கவலைங்க...

அ.மு.செய்யது said...

//எம்.எம்.அப்துல்லா said...
நாட்டில் எத்தனையோ காமெடி...அதில் இதுவும் ஒன்று...அவர் பேச்சைக் கேட்பவர்கள் வாயால் சிரிக்க மாட்டார்கள்.
//

ஹா..ஹா...


வாங்க அண்ணே !!!

அ.மு.செய்யது said...

//வித்யா said...
இந்த தேர்தல் காமெடியன்கள பார்த்து சிரிச்சுட்டு போய்கிட்டே இருக்கனும் பாஸ். வீணா டென்சனாவாதீங்க:)
//

அட ஆமாங்க...நோ டென்சன்..இது ஒரு காமெடி பதிவே !!!!

அ.மு.செய்யது said...

//ஜீவன் said...
அவங்க பெரியம்மா!! சோனியாவ புடிக்கலைனா?
நேரடியா சொல்ல வேண்டியதுதானே?

ஏன் ? இப்படி ? சின்ன புள்ள தனமா ?
//

நுண்ணரசியல் எல்லாத்துக்கும் பொருந்தும் ஜீவன்..


வருகைக்கு நன்றி !!!

அ.மு.செய்யது said...

//Anonymous said...
அப்பனை போல் பிள்ளையும் அவசரக்காரனாக இருக்கிறான். என்ன செய்ய்ய?
அவரவர் தலைஎழுத்துப்படி ஆகட்டும்.நாம் என்ன செய்ய முடியும்?
//

தந்தை காலம் சுருக்காக முடிந்து விட்டது...பாவம் பிள்ளையாவது பொழச்சி போகட்டும்.

அ.மு.செய்யது said...

//எம்.எம்.அப்துல்லா said...
நாட்டில் எத்தனையோ காமெடி...அதில் இதுவும் ஒன்று...அவர் பேச்சைக் கேட்பவர்கள் வாயால் சிரிக்க மாட்டார்கள்.


//முட்டாள்தனமான வார்த்தைகள், மதத்தால் வேறுபட்டிருந்தாலும், நீங்களும், நானும் ஒரு தாய் வயிற்றில் வந்தவர்கள் தானே.

//

முரு அண்ணே மிக்க நன்றி உங்களின் ஆதரவான தோழமைக்கும், சகோதரத்துவத்திற்கும்.
//

வழிமொழிகிறேன்.

நன்றி முரு....

புதியவன் said...

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சுன்னு சொல்லுர மாதிரி அரசியல்வதிகளின் பேச்சு தேர்தல் முடிந்தால் போய்விடும்...

புதியவன் said...

தேர்தல் நேரத்தில் இது மாதிரி புதுசு புதுசா காமெடியன்கள் களத்தில் இறக்கிவிடப்படுவார்கள்...அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது அவர்களுக்கே சில நேரம் புரியாது...ஏன்யா நான் சரியாத்தான் பேசுறேனன்னு பக்கத்தில் இருப்பவர்களிடம் தன் சந்தேகத்தை சரி பார்த்து பேசுகிறவர்களும் கூட உண்டு...அதனால டென்சன் வேண்டாம் செய்யது...

புதியவன் said...

கடைசியா உங்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன்...காமெடிய காமெடியா மட்டும் பாருங்க செய்யது...

குடந்தை அன்புமணி said...

தேர்தல்ல நாம யாருன்னு காண்பிச்சா போதும்.

kankaatchi.blogspot.com said...

தந்தை காலம் சுருக்காக முடிந்துவிட்டது
இல்லை தாய் கழுத்திற்கு சுருக்காக வந்ததால் கருக்கப்பட்டது என்பதை பெரிசுகளுக்கு தெரியும்
பிள்ளை பிழைத்து போகட்டும்
பாவம், இளம்கன்று பயமறியாது என்று மனசு துடிக்கிறது
ஆனால் இருக்கும் இடம் பா.ஜ க
ஆனால் அவரின் பாட்டி கட்சி தேர்தல் நேரத்தில் பா.ஜ. காவை பழி வாங்க
கிடைத்த இந்த வாய்ப்பை விடுமா?
பாகிஸ்தான் நவாப் மற்றும் கிரிகெட் போட்டி செய்திகளில் மேய்ந்து கொண்டிருந்த டெல்லி மீடியாக்கள் எல்லாம் நேற்றிலிருந்துவருணை குத்தி.கொதறி அவரை கைது செய்து சிறையில் தள்ளும் அளவிற்கு சென்றுவிட்டன.
குண்டு வைத்து அப்பாவி மக்களை கொலை செய்தவனுக்கு தூக்கு தண்டனை விதித்தால் அதை நிறைவேற்றாது காங்கிரஸ் அரசு
ஆனால் ஒரு கூட்டதின் முன் உணர்ச்சி வசப்பட்டு அவர்கள் உள்ளத்தில் உள்ள உணர்ச்சிகளை கொட்டிவிட்டால் உடனே வெட்டிவிடுவார்கள்.பிணையில்லா கைது வாரண்ட் பிறப்பித்து சிறையில் தள்ளிவிடுவார்கள்.
பதுக்கல்காரனுக்கு தண்டனை கிடையாது
ஆயிரக்கணக்கான பேர்களின் உயிர்களை குடிக்கும் போலிமருத்துவர்கள்,
எதிர்கால இந்திய இளைய சமுதாயத்தினரின் வாழ்க்கையை சீரழிக்கும்,
சாராய வியாபாரிகளுக்கும், கஞ்சா பேர்வழிகளுக்கும், தண்டனை இல்லை,
எல்லா மதத்திலும் மக்களை ஏமாற்றி [பிழைக்கும் போலி சாமியார்கள்,
டுபாக்கூர் நிதி நிறுவன கம்பனிகள்,
இளசுகளின் மனதை கெடுத்து கவர்ச்சி காட்டி
அவர்களின் வாழ்வை சிதைக்கும் பட தயாரிப்பாளர்கள்,
நடிகைகள் இவர்கள் மீது நடவைக்கைகள் இல்லை
சில ஆண்டுகள் வரை ஆண்டியாய் தெருவில்
சுற்றிக் கொண்டிருந்த அரசியல்வாதிகள் கோடிகணக்கில்
பல ஆயிரம் தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்தலை
கொள்கையாக கொண்டு மக்களை சுரண்டி தின்னும்
போக்கை கண்டிக்க மக்களுக்கு தைரியமில்லை அறிவுமில்லை.
செய்திகளை படித்துவிட்டு உணர்ச்சிவசப்பட்டு
பழி வாங்குவதும் மீண்டும் அடுத்த நாள்
மற்றொரு செய்திக்காக தூங்கி விழித்து காத்திருப்பதும்
இந்திய மக்களின் அன்றாட வேலையாக போய்விட்டது.

வேத்தியன் said...

தேர்தல் நேரங்கள்ல இந்த மாதிரியான பேச்சுகள் எல்லாம் சகஜம்ங்க...
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...
:-)
அவர் சொன்னா அது நடந்திடுமா ???
நீங்க டென்ஸன் ஆகாதீங்க தல...
:-)

வேத்தியன் said...

கடைசில கேட்ட கேள்வி சூப்பர்...
பதில் சொல்லட்டும் பாக்கலாம்...

அ.மு.செய்யது said...

//புதியவன் said...
தேர்தல் நேரத்தில் இது மாதிரி புதுசு புதுசா காமெடியன்கள் களத்தில் இறக்கிவிடப்படுவார்கள்...அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது அவர்களுக்கே சில நேரம் புரியாது...ஏன்யா நான் சரியாத்தான் பேசுறேனன்னு பக்கத்தில் இருப்பவர்களிடம் தன் சந்தேகத்தை சரி பார்த்து பேசுகிறவர்களும் கூட உண்டு...அதனால டென்சன் வேண்டாம் செய்யது...
//

ஏற்று கொள்கிறேன் புதியவன் !!!!

அ.மு.செய்யது said...

//புதியவன் said...
கடைசியா உங்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன்...காமெடிய காமெடியா மட்டும் பாருங்க செய்யது...
//

இதை ஒரு காமெடி ப‌திவா எடுத்து கொள்ளுங்க‌ள் புதியவ‌ன்.

அ.மு.செய்யது said...

//குடந்தைஅன்புமணி said...
தேர்தல்ல நாம யாருன்னு காண்பிச்சா போதும்.
//

நிறைவேற்றுதல்கள் ஒருபுறமிருக்கட்டும்.

வாக்குறுதிகளும் வீரவசனங்களும் முக்கியம் அமைச்சரே !!!!!!

( நன்றி அன்புமணி வருகைக்கு )

மணிகண்டன் said...

செய்யது,

ஏதாவது YouTube வீடியோ இருக்கா ? இருந்தா கொஞ்ச நேரம் அவங்க உளர்றது கேக்கலாமே. இவங்க எல்லாம் இக்னோர் பண்றது தான் சரி. ஆனா நம்ப ஊருல புடிச்சி ஜெயில்ல போட்டு வீணான popularity கொடுப்பாங்க. இத கேட்ட நாலு லூசு பய புள்ளைக நம்ப மதத்துக்கு போராடராருன்னு வோட்டு போடுவாங்க. எதிர்மறையா கருத்து சொன்னா ஒரு நல்ல ரீச் இருக்கு நம்ப ஊருல. அத அருமையா உபயோகித்து polarize பண்றாக நம்ப சமூகத்த. அதுவும் சமீப காலமா அதிகமா ஆகி இருக்கு. 24 hours news channel ஒரு முக்கிய காரணம். எளிதா மக்களிடம் போய் சேருது இவங்களோட கருத்து கருமாந்திரம்.

கடைசியா நீங்க கேட்டு இருக்கற கேள்வில எனக்கு உடன்பாடு இல்ல !

அ.மு.செய்யது said...

//enpaarvaiyil said...

குண்டு வைத்து அப்பாவி மக்களை கொலை செய்தவனுக்கு தூக்கு தண்டனை விதித்தால் அதை நிறைவேற்றாது காங்கிரஸ் அரசு
ஆனால் ஒரு கூட்டதின் முன் உணர்ச்சி வசப்பட்டு அவர்கள் உள்ளத்தில் உள்ள உணர்ச்சிகளை கொட்டிவிட்டால் உடனே வெட்டிவிடுவார்கள்.//

ஓஹ்.இதுதான் ஒரு ச‌ராச‌ரி இந்திய‌ குடிம‌க‌னின் உண‌ர்ச்சியின் உச்ச‌க‌ட்ட‌ வெளிப்பாடா..நீங்க‌ள் சொல்வ‌து அப‌த்த‌மாக‌ இருக்கிற‌து.

//டெல்லி மீடியாக்கள் எல்லாம் நேற்றிலிருந்துவருணை குத்தி.கொதறி அவரை கைது செய்து சிறையில் தள்ளும் அளவிற்கு சென்றுவிட்டன.//

அவ‌ரை கைது செய்ய உத்தேசித்த‌து தேர்த‌ல் ஆணைய‌ம் ஐயா !!!! என்.டி.டிவியோ, சி.என்.என் ஓ இல்லை.




//செய்திகளை படித்துவிட்டு உணர்ச்சிவசப்பட்டு
பழி வாங்குவதும் மீண்டும் அடுத்த நாள்
மற்றொரு செய்திக்காக தூங்கி விழித்து காத்திருப்பதும்
இந்திய மக்களின் அன்றாட வேலையாக போய்விட்டது.//

அதும‌ட்டுமின்றி, ம‌க்க‌ளிட‌ம் செல‌க்டிவ் அம்னீஷியாவும், ச‌ப்பை க‌ட்டு க‌ட்டுத‌லும் கூட அன்றாட‌ வாடிக்கையாகிவிட்ட‌தே !!!!

நன்றி "என் பார்வையில்" த‌ங்க‌ள் க‌ருத்துகளுக்கு !!!

அ.மு.செய்யது said...

//வேத்தியன் said...
தேர்தல் நேரங்கள்ல இந்த மாதிரியான பேச்சுகள் எல்லாம் சகஜம்ங்க...
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...
:-)
அவர் சொன்னா அது நடந்திடுமா ???
நீங்க டென்ஸன் ஆகாதீங்க தல...
:-)
//

அதெல்லாம் முழுநீள நகைச்சுவை காட்சிகள்னு தாங்க போட்டேன்.

டேங்க்ஸ் வேத்தியன் சகா.

அ.மு.செய்யது said...

//மணிகண்டன் said...
செய்யது,

ஏதாவது YouTube வீடியோ இருக்கா ?
//

இல்லீங்க..அலுவலகத்தில் காணொளிகள் தடை.

//இத கேட்ட நாலு லூசு பய புள்ளைக நம்ப மதத்துக்கு போராடராருன்னு வோட்டு போடுவாங்க. //

நோக்கம் நிறைவேறுகிறது இல்லையா..அதானே இவர்களுக்கு வெற்றி !!!!

//கடைசியா நீங்க கேட்டு இருக்கற கேள்வில எனக்கு உடன்பாடு இல்ல !//

ஏங்க ????

நன்றி மணிகண்டன் வருகைக்கு !!!

மணிகண்டன் said...

//கடைசியா நீங்க கேட்டு இருக்கற கேள்வில எனக்கு உடன்பாடு இல்ல !//
***
ஏங்க ????
***

யோசிச்சு பாருங்க செய்யது.

எல்லா செயல்களையும் மக்களையும் ஒரு சின்ன வட்டதுக்குள்ளார யோசிக்க வைக்கிறது தான் இவங்களோட intelligence. அப்ப தான் அவங்க நோக்கமும் நிறைவேறும்.

அ.மு.செய்யது said...

//மணிகண்டன் said...
//கடைசியா நீங்க கேட்டு இருக்கற கேள்வில எனக்கு உடன்பாடு இல்ல !//
***
ஏங்க ????
***

யோசிச்சு பாருங்க செய்யது.
//

செய்கிறேன்.

//எல்லா செயல்களையும் மக்களையும் ஒரு சின்ன வட்டதுக்குள்ளார யோசிக்க வைக்கிறது தான் இவங்களோட intelligence. அப்ப தான் அவங்க நோக்கமும் நிறைவேறும்.//

ஒரு தேர்ந்த அரசியல்வாதிக்கான குறைந்த பட்ச தகுதியே இதானே !!

சி தயாளன் said...

அரசியல்....:-((

வெற்றி said...

வருண்காந்தி இந்த மில்லினியத்தின் சிறந்த கோமாளி.

அவரிடம் போய் பெரிய பெரிய கேள்வியெல்லாம் கேட்டுகிட்டு?

அவனயெல்லாம் எதுல அடிச்சாலும் அந்தப் பொருள் உங்கமேல கேஷ் போடும்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//ஜீவன் said...

அவங்க பெரியம்மா!! சோனியாவ புடிக்கலைனா?
நேரடியா சொல்ல வேண்டியதுதானே?

ஏன் ? இப்படி ? சின்ன புள்ள தனமா ?//

ரிப்பீட்டு பண்ணிக்கிறேன்!
அந்தப் பையன் அரசியலில் பெரிய ஆளாக முயற்சி பண்ணக்கூடும்.
மோடி, அத்வானிக்கெல்லாம் கிலி அல்லவா வந்திருக்கும் இப்போ!

அவிங்க பொழப்புல இந்தப் பொடியன் மண்ணள்ளிப் போடுறான் பாருங்க!

அறிவிலி said...

அருவருப்பான வார்த்தைகளை பேசிய வருண் காந்தியை நிசசயம் முழு நாடுமே ஒதுக்கி விடும்.

நீங்கள் எல்லாம் டென்ஷன் ஆகாதீங்க.

கணினி தேசம் said...

அண்ணே செய்யது அண்ணே (!!),

என்ன இது சிறுபிள்ளைத்தனமா இருக்கு?
ஹி.ஹி..!

இந்த அரசியல் கோமாளிகள் பேசுவதைக் கேட்டுகிட்டு..
வீணா கோபப்பட்டுகிட்டு... டென்சனாகி.. ஹைய்யோ...ஹைய்யோ..!!

லூஸ்ல வுடு! லூஸ்ல வுடு மாமு!!

cute baby said...

காமெடி பதிவ எடுத்துக்கிட்டாலும் அதில் உண்மை இருக்குல செய்யது.

நசரேயன் said...

என்னது காந்தி சொத்துட்டாரா?

வீடுங்க தல.. இதெல்லாம் தேர்தல் வசனம்

மணிகண்டன் said...

பரம்ஸ்,

உங்க கருத்து எனக்கு புரியல. இங்க வருன் காந்தி பேசினது பத்தி எழுதி இருக்காரு. அதுல என்ன ...... கலைஞர், திராவிட கழகம் பத்தி எல்லாம் அவர் எழுதணும் ?

ஆதவா said...

செய்யது... எனக்கு விவாதம் அதுவும் அரசியல் விவாதம் செய்யுமளவுக்கு பக்குவமில்லை... இருந்தாலும்

சிறு/பெரும்பான்மை பிரிவுகள் எனக்குப் பிடிப்பதில்லை..

இதுவரையிலும் நான் பேசிய மனிதர்களிடம் மதத்தைக் கண்டதில்லை!!!

சரி சரி!!! நான் ஒதுங்கிக்கிடறென்.... விவாதங்கள் தொடரட்டும்!!

anbudan vaalu said...

இது ஒரு பிடிமானமில்லா தேர்தல் வாக்குறுதித் தனமான பேச்சு.அரசியல் கண்ணியம் பற்றியெல்லாம் கவலைப்படாத சந்தர்ப்பவாத உளறல்...பாவம் அறியாப் பிள்ளை.ராகுல் அண்ணன்....தம்பிக்கு ட்யூஷன் எடுங்களேன்.போனாபோவுது எதிர்கட்சியா இருந்தா என்ன நம்ம தம்பிதான....

Anonymous said...

பலவீனமான மக்களை பலமுள்ள மனித மிருகங்கள் ஒன்று சேர்ந்து கொண்டு சுரண்டுவதும் அவர்களை வாழ்வில் முன்னுக்குக் வராமல் தடுப்பதும், எதிர்த்தால் அவர்கள் அழிப்பதும் உலகளாவிய பிரச்சினை.
இதற்க்கு,மதம்,மொழி,இனம்,ஜாதி என்ற பேதங்கள் கிடையாது.
இடத்திற்கு தகுந்தார்ப்போல் வடிவங்கள் எடுத்துக்கொண்டு அது பேயாட்டம் ஆடும். அவ்வளவுதான்.
இந்த உலகம் தோன்றிய நாள் முதல் இப்படியேதான் போய்க்கொண்டிருக்கிறது.
இந்த உலகத்தில் அன்பு மதம் தளிர்த்து .அகந்தை எண்ணம் கொண்டோர் ஒழியும் வரை உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஏற்ற தாழ்வுகள் இருந்துகொண்டேதான் இருக்கும்.

அ.மு.செய்யது said...

//’டொன்’ லீ said...
அரசியல்....:-((
//

வாங்க நுண்ணரசியல் டொன்லீ..

அ.மு.செய்யது said...

//தேனியார் said...
வருண்காந்தி இந்த மில்லினியத்தின் சிறந்த கோமாளி.

அவரிடம் போய் பெரிய பெரிய கேள்வியெல்லாம் கேட்டுகிட்டு?

அவனயெல்லாம் எதுல அடிச்சாலும் அந்தப் பொருள் உங்கமேல கேஷ் போடும்.
//

வாங்க தேனியாரே...கருத்துகளுக்கு நன்றி !!!

அ.மு.செய்யது said...

//ஜோதிபாரதி said...

ரிப்பீட்டு பண்ணிக்கிறேன்!
அந்தப் பையன் அரசியலில் பெரிய ஆளாக முயற்சி பண்ணக்கூடும்.
மோடி, அத்வானிக்கெல்லாம் கிலி அல்லவா வந்திருக்கும் இப்போ!

அவிங்க பொழப்புல இந்தப் பொடியன் மண்ணள்ளிப் போடுறான் பாருங்க!
//

ச‌ரியாக‌ சொன்னீர்க‌ள்.


அர‌சிய‌லில் வ‌ருணுக்கு ந‌ல்ல‌ எதிர்கால‌ம் இருக்கிற‌து.

அ.மு.செய்யது said...

நன்றி வெளிச்சப் பதிவரே தங்கள் வருகைக்கு !!!!!

அ.மு.செய்யது said...

வாங்க கணினி..வருகைக்கு நன்றி !!!!

நம்ம ஃப்ரீயா வுடுறமே இல்லையோ..மீடியாக்கள் வெளுத்து வாங்குகின்றன.

அ.மு.செய்யது said...

//ஆதவா said...
செய்யது... எனக்கு விவாதம் அதுவும் அரசியல் விவாதம் செய்யுமளவுக்கு பக்குவமில்லை... இருந்தாலும்

சிறு/பெரும்பான்மை பிரிவுகள் எனக்குப் பிடிப்பதில்லை..

இதுவரையிலும் நான் பேசிய மனிதர்களிடம் மதத்தைக் கண்டதில்லை!!!

சரி சரி!!! நான் ஒதுங்கிக்கிடறென்.... விவாதங்கள் தொடரட்டும்!!
//

வாங்க...ஆதவா..வருகைக்கு நன்றி !!!!!!

அ.மு.செய்யது said...

//anbudan vaalu said...
இது ஒரு பிடிமானமில்லா தேர்தல் வாக்குறுதித் தனமான பேச்சு.அரசியல் கண்ணியம் பற்றியெல்லாம் கவலைப்படாத சந்தர்ப்பவாத உளறல்...பாவம் அறியாப் பிள்ளை.ராகுல் அண்ணன்....தம்பிக்கு ட்யூஷன் எடுங்களேன்.போனாபோவுது எதிர்கட்சியா இருந்தா என்ன நம்ம தம்பிதான....
//

வாங்க வால்ஸ்...இது உளறல் தான்.ஆனால் திட்டமிட்ட உளறல்.

அ.மு.செய்யது said...

//Anonymous said...
பலவீனமான மக்களை பலமுள்ள மனித மிருகங்கள் ஒன்று சேர்ந்து கொண்டு சுரண்டுவதும் அவர்களை வாழ்வில் முன்னுக்குக் வராமல் தடுப்பதும், எதிர்த்தால் அவர்கள் அழிப்பதும் உலகளாவிய பிரச்சினை.
இதற்க்கு,மதம்,மொழி,இனம்,ஜாதி என்ற பேதங்கள் கிடையாது.
இடத்திற்கு தகுந்தார்ப்போல் வடிவங்கள் எடுத்துக்கொண்டு அது பேயாட்டம் ஆடும். அவ்வளவுதான்.
இந்த உலகம் தோன்றிய நாள் முதல் இப்படியேதான் போய்க்கொண்டிருக்கிறது.
இந்த உலகத்தில் அன்பு மதம் தளிர்த்து .அகந்தை எண்ணம் கொண்டோர் ஒழியும் வரை உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஏற்ற தாழ்வுகள் இருந்துகொண்டேதான் இருக்கும்.
//


அனானி க‌ருத்துக‌ளுக்கு ந‌ன்றி !!

Surival of the Fittest !!!!

டார்வினின் கோட்பாடு அனைத்திற்கும் பொருந்தும்.

அ.மு.செய்யது said...

//cute baby said...
காமெடி பதிவ எடுத்துக்கிட்டாலும் அதில் உண்மை இருக்குல செய்யது.
//

இல்லாம‌ பின்ன‌..அதுக்குதான ப‌திவே..கியூட் பேபி..ந‌ன்றி !!!!

அ.மு.செய்யது said...

//params said...
Where did you go when DK, DMK and other odukalis manifested Hindus as "theives."?
What did you do when Dravida Duplicates insulted Hinduism and Hindus?

Now just for one political drama by Varun, you guys are shouting like hell broke loose.

PARAMS
//

Mr.Params

I ve never been a part of any political party or damn shit.Whoever plays conspiracy against any community or religion that should be condemned irrespective of any circumstances.

If this is just a political drama then why BJP made seven different versions of reaction into this issue.
??

This is a peak of ultimate hindutwa drama played indivudually by varun or collectively by BJP.

Anonymous said...

(வருண்)மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
காங்க்றேச்ஸ் கட்சிக்கு எதிர் கட்சியில் உள்ளவர்கள் எதை பேசினாலும் அதற்க்கு திரைக்கதை வசனம் எழுதி படம் எடுத்து அடுத்த நாளே திரையிட்டு விடுவார்கள்
அவர்கள் என்றும் அவர்கள் ஆட்சியின் சாதனைகளை சொல்லி வோட்டு கேட்டது கிடையாது
மாநிலத்தில். சுயமாக முடிவெடுக்க திராணியில்லாத கட்சி
எதேர்க்கேடுத்தாலும் கோஷ்டி சண்டை போட்டுகொண்டு டெல்லிக்கு காவடி தூக்கும் கட்சி.
இந்துக்களும் இஸ்லாமியர்களும் மற்ற மதத்தினரும் ஒற்றுமையாகத்தான் இந்தியாவில் வாழ்கிறார்கள். ஆனால் அவர்களிடையே விரோதத்தை தூண்டி விடுவது சுயநல அரசியல்வாதிகளும்,மத வெறியர்களும்தான்.
மக்கள் அவர்களை இனம் கண்டுகொண்டு ஒதுக்கும்வரை அவர்களின் ஆட்டம் நடந்துகொண்டும் அப்பாவி மக்களும் பலியாகி கொண்டுதான் இருப்பார்கள்.
எப்போதும் யார் முதுகிலாவது சவாரி செய்து தேர்தலில் ஜெயித்ததும் கூட்டணி கட்சியினருக்கு சில்லறையை வெட்டிவிட்டு ஆட்சியில் அமர்ந்துகொண்டு கோடிகணக்கில் அவர்கள் சுருட்டுவது கைவந்த கலை.
அந்த கலையை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட திராவிட கட்சிகள் அவர்களை தமிழ்நாட்டிலிருந்து விரட்டிவிட்டன .
விரைவில் இந்தியாவை விட்டு அந்த கட்சி காணாமல் போகும் என்பது காலத்தின் கட்டாயம்.

S.A. நவாஸுதீன் said...

இவன் மகாத்மா காந்தி அல்ல. பொய்யான அரசியல் வர்ணம் அடிக்கப்பட்ட வருன் காந்தி. இவன் பேச்சையெல்லாம் சீரியசா எடுக்கக்ககூடாது. அவன கவனிக்க எலெக்சன் கமிசன் இருக்கு. விடுங்க தல

Anonymous said...

தீபொறி வடிவேலு காமெடி போல கீது
எப்படியோ வருணின் பேச்சு ஒரே நாளில் பெரிய
அளவில் நாடு முழுவதும் விவாதத்திற்கு உரிய பொருள் ஆகிவிட்டது.
நேற்று வரை வருண் காந்தி யார் என்று
யாருக்கு தெரியும்?
ஆனால் இன்றோ அவர் முகத்தை திரும்ப திரும்ப
தொலைகாட்சியில் போட்டு அனைவற்றையும் திரும்பி
பார்ர்க்க வைத்துவிட்டது
.யாருக்கு வெற்றி?
அவருக்கா?மீடியாவுக்கா??

Anonymous said...

Mr.Params
Majority of hindus are hindus for namesake only.
They follow certain hindu customs during prayer and observe religious
practices without knowing the reasons for them
They take all good things from other religions also.
Only the religious heads and fanatics and politicians are creating enmity between the people to satisfy their selfish ends.
They strongly believe that GOD will take care of everything. including the assaults on their religion.

RAMYA said...

செய்யது இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகக் கூடாது தேர்தல்ன்னா இதெல்லாம் சகஜம்ன்னு எல்லாரும் சொல்லுவங்க.

ஆனா நீங்க கேட்டிருக்கிறது சரியான நியாயம்.

சம்மந்தப் பட்டவர்கள் படித்து ஏதேனும் சொல்லுகிறார்களா என்று பார்க்கலாம்!!

RAMYA said...

எல்லாரும் ஒற்றுமையா ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்களாக இருக்கும் போது இது போல் தேர்தலுக்காக தடுமாற்றம் நிறைந்த பேச்சுக்களை தவிர்க்கலாம்.

RAMYA said...

//
ஜீவன் said...
அவங்க பெரியம்மா!! சோனியாவ புடிக்கலைனா?
நேரடியா சொல்ல வேண்டியதுதானே?

ஏன் ? இப்படி ? சின்ன புள்ள தனமா ?

//

இதுதான் சரியான பதில்!!

RAMYA said...

செய்யது எல்லாரும் ஒற்றுமையாத்தான் இருக்கின்றோம் நீங்க இதுக்கெல்லாம் டென்ஷன் ஆக வேண்டாம்.

பாருங்க உங்களுக்கு எவ்வளவு சகோதரர்கள் கை கொடுக்கிறார்கள்

இது தான் நிதர்சனமான உண்மை.

மீதி எல்லாம் மாயை மறந்து விடுங்கள்!!

அ.மு.செய்யது said...

//நசரேயன் said...
என்னது காந்தி சொத்துட்டாரா?

வீடுங்க தல.. இதெல்லாம் தேர்தல் வசனம்
//

வாங்க நசரேயன்..நன்றி வருகைக்கு !!!

உங்க பின்னூட்டத்த பாக்கவே இல்ல...மன்னிக்கவும்.

அ.மு.செய்யது said...

//Syed Ahamed Navasudeen said...
இவன் மகாத்மா காந்தி அல்ல. பொய்யான அரசியல் வர்ணம் அடிக்கப்பட்ட வருன் காந்தி. இவன் பேச்சையெல்லாம் சீரியசா எடுக்கக்ககூடாது. அவன கவனிக்க எலெக்சன் கமிசன் இருக்கு. விடுங்க தல
//

வாங்க நவாஸ்..

வருண் ..வர்ணம் சூப்பருங்க..

அ.மு.செய்யது said...

//Anonymous said...
தீபொறி வடிவேலு காமெடி போல கீது
எப்படியோ வருணின் பேச்சு ஒரே நாளில் பெரிய
அளவில் நாடு முழுவதும் விவாதத்திற்கு உரிய பொருள் ஆகிவிட்டது.
நேற்று வரை வருண் காந்தி யார் என்று
யாருக்கு தெரியும்?
ஆனால் இன்றோ அவர் முகத்தை திரும்ப திரும்ப
தொலைகாட்சியில் போட்டு அனைவற்றையும் திரும்பி
பார்ர்க்க வைத்துவிட்டது
.யாருக்கு வெற்றி?
அவருக்கா?மீடியாவுக்கா??
//

சந்தேகமேயில்லை..வருணுக்கு தான்..

சிறைவாசம் மட்டும் சென்று விட்டு வந்தால் அவர் தான் ஹீரோ..

அ.மு.செய்யது said...

//Long live pseudo secularism, plagiarism, and anti-hinduism//

Joining with you PARAMS !!

Add Anti-Islamic too.

Thanks for visiting my blog and for your comments !!!!!

அ.மு.செய்யது said...

//RAMYA said...
செய்யது இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகக் கூடாது தேர்தல்ன்னா இதெல்லாம் சகஜம்ன்னு எல்லாரும் சொல்லுவங்க.

ஆனா நீங்க கேட்டிருக்கிறது சரியான நியாயம்.

சம்மந்தப் பட்டவர்கள் படித்து ஏதேனும் சொல்லுகிறார்களா என்று பார்க்கலாம்!!
//

வாங்க டீச்சர்..

சம்மந்தப் பட்டவர்கள்னா யாருங்க..ஐயயோ.நீங்க யார சொல்றீங்க..?

அ.மு.செய்யது said...

//RAMYA said...
செய்யது எல்லாரும் ஒற்றுமையாத்தான் இருக்கின்றோம் நீங்க இதுக்கெல்லாம் டென்ஷன் ஆக வேண்டாம்.

பாருங்க உங்களுக்கு எவ்வளவு சகோதரர்கள் கை கொடுக்கிறார்கள்
//

முற்றிலும் உண்மை.

உடன் நிற்கும் அனைத்து சகோதரர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.

நட்புடன் ஜமால் said...

email me!

with your numbers

Anonymous said...

சிறுபான்மை என்றும் பெரும்பான்மை என்றும் நம்மை பிரித்து ஆதாயம் தேடும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தராதீர்கள்.
நாம் அனைவரும் இந்தியர்கள்.
நம்மிடையே பிரிவினை ஏற்ப்படுத்தி குளிர் காயும் அரசியல் கட்சி தலைவர்களையும்,எங்கிருந்தோ இங்கு வந்து நம் மீது குண்டு வைத்து நம்மை அழிக்க நினைக்கும் மூடர்களுக்கு இங்கிருக்கும் சில தேச விரோதிகள் ஆதரவு தருவதையும் இனம் கண்டு கொண்டு அவர்களை ஒதுக்கினால் போதும்
நாம் அனைவரும் இன்பமாக வாழலாம்
நமக்கு வெயிலிருந்தும் மழையிலிருந்தும் காப்பதற்கு குடையாய் இருப்பவர்கள் அவர்களே(மான் மார்க் குடை)
தெருவு தெரு இறைச்சி உண்ணும் இந்துக்களுக்கு இறைச்சியை விர்ப்பதும் அவர்களே
மற்றும் அனேக கடைகளை வைத்து வியாபாரங்களை நடத்துபவர்கள் அவர்களே.
நம் கால்களுக்கு காலணிகள் தந்து விற்ப்பனை செய்பவர்களும் அவர்களே.
இப்படி நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..தர்காக்களில் வந்து வணங்கும் இந்துக்கள் எவ்வளவு. பேர்,
இப்படியாக சொல்லிக்கொண்டே போகலாம்.
மக்கள் நாம் ஒற்றுமையாகத்தான் இருக்கின்றோம்
அவரவர் சார்ந்த மத நம்பிக்கைகளில் ஏற்ப்படும் சில உரசல்களை ஊதி ஊதி பெரிதாக்கி நமக்குள் விரோதத்தை வளர்த்தது அரசியல்வாதிகளும் சுயனலவாதிகளுமதான்.
உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்து
அழிக்கும் அழிவுப்பாதையை தேர்ந்தெடுத்து அனைவருக்கும் துன்பத்தை விளைவிப்பதை விட்டுவிட்டு உண்மையை உணர்ந்துகொண்டு,விட்டு கொடுத்து ,அவரவரின் மத கொள்கைகளுக்கு மதிப்பளித்து, அவரவரின் நம்பிக்கைகளில் தலையிடாமல் வாழ்ந்தால் இருவருக்குமே நலம்,
.
அனைவர்க்கும் கடந்த காலம் கசப்பாகத்தான் இருக்கும்
அதற்காக அதையே மீண்டும் மீண்டும் சுட்டி காட்டி விரோதத்தை வளர்த்துக்கொண்டிருப்பது. அறிவீனர்கள் செய்யும் செயலாகும்
மகாகவி பாரதியின் கவிதை வரிகளை இங்கு நினைவு கொள்ளுதல் ஏற்புடையதாக இருக்கும்
சென்றதினி மீளாது மூடர் நீவிர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையில்
வீழ்ந்து குமையாதீர்
இன்று புதிதாய் பிறந்தோம் என்ற எண்ணமதை சிந்தித்து தின்று விளையாடி இன்பமுற்று வாழ்வீர்
தீமைகள் ஒழிந்து போம் திரும்பி வாரா.
தீமை என்ற சொல்லில் தீ இருக்கிறது.
தீ அனைத்தையும் அழிக்கும் ஆற்றல் பெற்றது
அதே சமயத்தில் அது அனைதையும் ஆக்கும் திறனும் பெற்றது.
அதை எதற்கு பயன்படுத்தவேண்டும் என்பதுதான் அறிவுள்ளவனையும் அறிவற்றவனையும் அடையாளம் காட்டுவது.
கடினம்தான். இருந்தாலும் தெளிவாக சிந்திக்க தெரிந்த நன்மக்கள் அதற்க்கான முயற்சிகளை தொடங்கட்டும்
வழி தவறியவர்களை நல்ல வழிக்கு கொண்டு வர முயற்சிக்கட்டும்.
முயற்சி திருவினையாக்கும்

வேத்தியன் said...

வந்து பார்க்கவும்...

Anonymous said...

காங்க்றேச்ஸ் கட்சி எப்போதும் யார் முதுகிலாவது சவாரி செய்து தேர்தலில் ஜெயித்ததும் கூட்டணி கட்சியினருக்கு சில்லறையை வெட்டிவிட்டு ஆட்சியில் அமர்ந்துகொண்டு கோடிகணக்கில் அவர்கள் சுருட்டுவது கைவந்த கலை.
அந்த கலையை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட திராவிட கட்சிகள் அவர்களை தமிழ்நாட்டிலிருந்து விரட்டிவிட்டன .
விரைவில் இந்தியாவை விட்டு அந்த கட்சி காணாமல் போகும் என்பது காலத்தின் கட்டாயம்.-அனானி கருத்து.
சொல்வது சரியே.
அயிந்து ஆண்டுகள் ரயில்வே அமைச்சராக இருந்து அவர்களுடன் ஆமாம் போட்டுவிட்டு,மாட்டு தீவன ஊழலை குழி தோண்டி புதைத்துவிட்டு இப்போது வைத்தான்யா ஆப்பு-லாலூ.
பீஹாரில் காங்கிரசுக்கு பட்டைநாமம்-வெறும் மூன்று தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட்டது.

தேவன் மாயம் said...

தேவையில்லாத பேச்சு..

தேவன் மாயம் said...

பி.ஜே.பி. மறுபடி அவரை வச்சு அரசியல் பண்ராங்க பாருங்க!

anbudan vaalu said...

sayed.........
தங்களை பழமொழிகள் தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.....

Tech Shankar said...

உங்களிடம் அனைத்து இந்தியர்கள் சார்பாக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்
மன்னிப்பீராக..

//அப்ப‌டியானால், அக‌ர‌ ( ஆங்கில )வ‌ரிசைப்ப‌டி, முத‌லில் அப்துல் கலாமையும், பிற‌கு அல்லா ர‌க்கா ர‌ஹ்மானையும் வெளியேற்றுவீர்க‌ளா ??

सुREஷ் कुMAர் said...

//
வருண்காந்தி யாரு?
எந்த கட்சி?
//
நல்லா கேக்குறாங்கய்யா டீடேலு..

sakthi said...

muru said...

முட்டாள்தனமான வார்த்தைகள், மதத்தால் வேறுபட்டிருந்தாலும், நீங்களும், நானும் ஒரு தாய் வயிற்றில் வந்தவர்கள் தானே.

repeat

அ.மு.செய்யது said...

//தமிழ்நெஞ்சம் said...
உங்களிடம் அனைத்து இந்தியர்கள் சார்பாக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்
மன்னிப்பீராக..


வாங்க..தமிழ் நெஞ்சம் அவர்களே !!!

நீங்க ஏங்க மன்னிப்பு கேட்கணும்.உங்கள் வருகை ஒன்றே போதும்.

பதிவுக்கு வந்தமை பெருமையளிக்கிறது.

அ.மு.செய்யது said...

வாங்க சுரேஷ்குமார்..Sakthi,

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி !!!!!

எம்.எம்.அப்துல்லா said...

அய்யா..ராசா..ஏதாவது எழுதுங்க. எத்தனை நாள்தான் வந்துவந்து சும்மா எட்டிப் பார்த்துட்டு போறது??

:)

அ.மு.செய்யது said...

அப்துல்லா அண்ணே !!!!!! ம‌ட்ட‌ற்ற‌ ம‌கிழ்ச்சி !!!

என்னோட‌ ப‌திவுக‌ள‌ கூட‌ எதிர்பார்க்கிற‌ ஜீவ‌ன்க‌ள் நாட்ல‌ இருக்காங்க‌ நினைக்கும் போது............................................................

சிங்காரச் சென்னையிலிருந்து நிரந்தரமாக பூனேவுக்கு நாடு கடத்தி விட்டதாலும்
வேலைப்ப‌ளுவாலும் ச‌ரிவ‌ர‌ எழுத‌ முடிய‌வில்லை.

உங்க‌ளுக்காக‌வாவ‌து விரைவில் ஒரு ப‌திவு போடுகிறேன்.ந‌ன்றி !!!!!!!

Suresh said...

nalla karuthukkal...

வெற்றி-[க்]-கதிரவன் said...

இன்னாபா, ஒரு பொறம்போக்கு எதோ சொல்லுசினு ,.,,,

நீயும் கேள்வி கேட்டு ஒரு பதிவ வெஸ்ட் பண்ணிடிஎபா....

தேவன் மாயம் said...

சென்னையில் இல்லையா செய்யது?

தேவன் மாயம் said...

செய்யது பூனா எப்படியுள்ளது?

தேவன் மாயம் said...

பூனாவில் தமிழர்கள் அதிகம் என்று கேள்விப்பட்டேன்!!

அ.மு.செய்யது said...

ஆமாங்க. தேவா...பூனேவுக்கு வேலை மாற்றலாகி ஒரு மாதம் ஆகிறது.ஏதோ சமாளித்து கொண்டிருக்கிறேன்.

நான் இருக்கும் பகுதியில் தமிழர்களை காண்பது அரிதாக இருக்கிறது.

Joe said...

நாட்டை விட்டு வெளியேறுவதை பற்றி எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை. (இப்பவே வருசத்தில பல மாசம் வெளிநாட்டில பரதேசியா தானே அலையுறோம்?)

கனடாவிலோ, ஆஸ்திரேலியாவிலோ குடியேறி விசா வாங்கி கொடுத்து விட்டு, ஒரு வேலை வாங்க உதவி செய்து, கையில் ஒரு ஐந்தாயிரம் டாலர்கள் கொடுத்து விட சொல்லுங்கள். ;-)